மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்;

வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;

வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;

பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;

புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள.

1970

Back to Top